அம்பலாந்தோட்டையில் மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஐவர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Case
Thamilini
11 months ago
அம்பலாந்தோட்டை, மமடல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹுங்கம பொலிசார் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்