மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் : அலட்சியம் செய்யாதீர்கள்!

#SriLanka #Health #Lifestyle #Heart Attack
Thamilini
1 year ago
மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் : அலட்சியம் செய்யாதீர்கள்!

இன்றைய காலகட்டத்தில், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பல உடல்நலப் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன, இதில் இரத்த அழுத்தம் முதலிடத்தில் உள்ளது. 

இரத்த அழுத்த பிரச்சனை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது மிக தீவிரமான இதய நோய்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. 

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். மாரடைப்பு திடீரென வருகிறது. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு உடல் சில சமிக்ஞைகளை காட்டும். அவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும். 

மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி, எந்த காரணமும் இல்லாமல் உடலின் எந்தப் பகுதியில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என கூறுகின்றனர்.

 மார்பு வலி

 மாரடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறி மார்பு வலி அல்லது அழுத்தம். இந்த வலி திடீரென ஆரம்பித்து தொடர்ந்து நீடிக்கும். இந்த அழுத்தம் மார்பில் அதிக சுமையாக இருப்பது போல் தோன்றும். பலருக்கு இந்த வலி கடுமையாக இருக்கும், சிலருக்கு லேசான அழுத்தம் இருக்கும். இருப்பினும், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதை புறக்கணிப்பது உங்களுக்கு ஆபத்தானது.

 தோள்பட்டை, கழுத்து வலி

 தோள்பட்டை, கழுத்து அல்லது முதுகில் ஏற்படும் வலியும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இந்த வலி மார்பு வலியுடன் சேர்ந்து இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வலி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவும். சில சமயங்களில் ஒரு பக்கமோ அல்லது இருபுறமோ கூட வலி இருக்கலாம் இடது கையில் வலி இடது கையில் வலி என்பது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறியாகும். இந்த வலி திடீரென்று தொடங்கி கடுமையானது. சில நேரங்களில் இந்த வலி லேசானதாகவோ அல்லது தொந்தரவாகவோ இருக்கும், ஆனால் அது நீண்ட நேரம் நீடித்தால், அதை புறக்கணிக்காதீர்கள்.

 தாடை அல்லது பல் வலி

 மாரடைப்பு அறிகுறிகளில் தாடை அல்லது பற்களில் வலியும் இருக்கலாம். இந்த வலி தாடையில் மட்டுமல்ல, கன்னங்கள் மற்றும் மேல் பகுதியிலும் பரவுகிறது. சில நேரங்களில் அது ஒரு பக்கத்தில் மட்டுமே கூர்மையாக இருக்கும்.

 சுவாசிப்பதில் சிரமம்

 சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதிக சோர்வு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாகும். பலர் இந்த அறிகுறிகளை சாதாரண சோர்வு என்று தவறாக நினைக்கிறார்கள், ஆனால் இந்த அறிகுறிகள் சில மணி நேரங்கள் வரை நீடிப்பதாக உணர்ந்தால் அது ஆபத்தானது. உடனே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.

 மாரடைப்பு வருவதற்கான மிக முக்கிய காரணங்கள் மாரடைப்பு வருவதற்கு மிக முக்கிய காரணம் ஒருவரின் வாழ்க்கை முறையாகும். வேகமாக எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பது, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டிருப்பது மாரடைப்பு வரும். அதேபோல் தவறான உணவு முறை பழக்கம், உடற்பயிற்சியின்மை ஆகிய காரணங்களுக்கும் மாரடைப்பு வரும். 

இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை இதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொழுப்பு அளவுகளையும் சரியாக பராமரிக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவு செக் செய்து கொள்ளுங்கள். 

மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது. எனவே தினசரி ஆரோக்கியமான உணவு எடுத்து, இரவில் நேரமாக தூங்கச் செல்வது என இருந்து மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4