வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 06 (February 06)

#people #history #Lanka4
Prasu
2 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 06 (February 06)

கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 60 – கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.
  • 1658 – சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.
  • 1685 – இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1788 – மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.
  • 1792 – மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.[1]
  • 1806 – கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
  • 1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
  • 1820 – முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.
  • 1840 – நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1851 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.
  • 1863 – இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.[2]
  • 1899 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1900 – நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.
  • 1918 – 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 1951 – கனடிய இராணுவம் கொரியப் போரில் இறங்கியது.
  • 1951 – அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
  • 1952 – ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.
  • 1958 – செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.
  • 1959 – டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • 1978 – அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.
  • 1989 – போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
  • 1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.
  • 2000 – உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
  • 2004 – மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2016 – தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.
  • பிறப்புகள்

  • 1465 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
  • 1665 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714)
  • 1814 – காரல் கிரவுல், தமிழகத்தில் மறை, தமிழ்ப் பணியாற்றிய செருமனியக் கிறித்தவப் பாதிரியார் (இ. 1864)
  • 1879 – மாண்டேகு, ஆங்கிலேய அரசியல்வாதி, பிரித்தானியாவின் இந்தியாவுக்கான செயலாளர் (இ. 1924)
  • 1884 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர் (இ. 1943)
  • 1890 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1988)
  • 1892 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1987)
  • 1911 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)
  • 1912 – இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
  • 1921 – சாலமன் பிக்கெல்னர். உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1975)
  • 1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
  • 1932 – சங்கர் கோசு, இந்திய வங்கக் கவிஞர்
  • 1935 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (இ. 1999)
  • 1945 – பாப் மார்லி, ஜமைக்கா பாடகர், கித்தார் இசைக்கலைஞர் (இ. 1981)
  • 1956 – பிறைசூடன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர்
  • 1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியர்
  • 1983 – சிறிசாந்த், இந்தியத் துடுப்பாளர்
  • 1986 – டேன் டிஹான், அமெரிக்க நடிகர்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!