பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவு
![பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் மூன்று நிலநடுக்கங்கள் பதிவு](https://ms.lanka4.com/images/thumb/1738833871.jpg)
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் இன்று மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆர்கைல் மற்றும் பியூட் (Argyll and Bute) பகுதியில், ஓபன் (Oban) நகரில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் திடீர் நில அதிர்வால் பயத்தில் அலறியடித்து எழுந்துள்ளனர்.
முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 3.03 மணிக்கு, 2.2 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஓபனில் இருந்து 5 கிமீ கிழக்கே மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் காலை 8.09 மணிக்கு 1.6 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சில நிமிடங்களில் மூன்றாவது நிலநடுக்கம் காலை 8.27 மணிக்கு 0.5 ரிக்டர் அளவில் பதிவானது.
நிலநடுக்கம் குறித்து அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
நில அதிர்வு கேர்ரேரா (Kerrera) தீவிலும், மல் (Mull) தீவிலும் உணரப்பட்டதாக்க மக்கள் தெரிவித்துள்ளனர்.வீடுகள் சில வினாடிகள் அதிர்ந்துள்ளன. பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)