சுற்றுலாப் பயணிகளுக்கு ஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் அறிவிப்பு!

#SriLanka #Tourist
Thamilini
1 year ago
சுற்றுலாப் பயணிகளுக்கு ஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டங்கள் தொடர்பில் அறிவிப்பு!

எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் டாக்டர் ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

 அனைவருக்கும் செழிப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்" என்ற கருப்பொருளில் பிம்ஸ்டெக் டிஜிட்டல் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டு தூதர்கள் குழு கலந்து கொண்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மாநில மேம்பாடு ஆகிய தலைப்புகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4