மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, நீர் கட்டணத் திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தைக் குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தனக்குக் கிடைத்ததாக அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பான முன்மொழிவு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கட்டண திருத்தம் குறித்த முடிவை அறிவிக்க முடியும் என்று ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
இந்த திருத்தம் நீர் கட்டணங்களை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



