நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்தியர்கள் கைது!

#India #SriLanka
Thamilini
1 year ago
நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்தியர்கள் கைது!

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த 14 இந்திய மீனவர்கள் இன்று (09.02) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 14 இந்திய மீனவர்களும் இரண்டு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்டமையோடு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4