அஸ்வெசும கொடுப்பனவை வங்கி கணக்குகளில் வைப்பிலிடும் நடவடிக்கை ஆரம்பம்!
#SriLanka
#Bank
#Aswesuma
Thamilini
11 months ago
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதற்காக 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்