நாட்டுக்கோழி - செய்முறை விளக்கம்!

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - 1கிலோ
2பெரிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 2
மிளகாய் - 1+2டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவையானஅளவு
உப்பு - தேவையானஅளவு
கறிவேப்பிலை
மல்லித்தழை - 02 ஸ்பூன்
நல்லெண்ணெய்
மசாலா அரைக்க: 4ஸ்பூன் மல்லி விதை 6வரமிளகாய் 6காஷ்மீரி மிளகாய் 1/2ஸ்பூன் மிளகு 1ஸ்பூன் சீரகம் 1டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் 10கிராம்பு 2துண்டு பட்டை 1அண்ணாச்சி மொக்கு 1ஏலக்காய் சமையல் குறிப்புகள் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் துண்டுகளை கழுவி வைக்கவும். நன்கு கழுவிய சிக்கனில்,உப்பு,மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும். வெறும் வாணலியில்,அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.
பின்,வெங்காயம், தக்காளி,1மிளகாய் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு,1மிளகாய் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும்,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் சிக்கன்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து,7-10 நிமிடங்களுக்கு மூடி போட்டு,அடிக்கடி கிளறவும்.இப்படி செய்தால் கவுச்சி வாசம் போகும். இனி 700ml அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
கொதித்ததும்,உப்பு சரி பார்த்து மிதமான தீயில் வைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும். குக்கரில் செய்தால் 3-4 விசில் விட்டு எடுக்கவும். சிக்கன் நன்றாக வெந்திருக்கும். கடைசியாக மல்லித்தழை தூவவும். இட்லி தோசை சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



