சிம்ம ராசியினர் அமைதி காக்க வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
சிம்ம ராசியினர் அமைதி காக்க வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்:
அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். பரணி: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். வரவில் தடையுண்டாகும் என்றாலும் செலவிற்கேற்ற பணம் வரும்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வரவால் மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்த வேலை முடியும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்.ரோகிணி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்கள் ஒத்துழைப்பு உண்டாகும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன்கள் வசூலாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

கடகம்:
புனர்பூசம் 4: திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். சங்கடம் விலகும்.பூசம்: பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவது சிறப்பு. ஆயில்யம்: பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்:
மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும்.பூரம்: திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துங்கள். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.அஸ்தம்: செயல் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: இன்று விவேகத்துடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

துலாம்:
சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுவாதி: வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.

விருச்சிகம்:
விசாகம் 4: செல்வாக்கு கூடும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும். நிதிநிலை உயரும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும் என்றாலும், வேலைகளில் கவனம் தேவை. கேட்டை: திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு:
மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பிரச்னைகள் தேடிவரும்.பூராடம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உத்திராடம் 1: வேலைகள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை தவிருங்கள்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த பணம்வரும்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு எதிரான வேலையில் சிலர் மறைமுகமாக ஈடுபடுவர். சதயம்: வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். விரும்புவதை அடைவீர். பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் இன்று அவசியம்.

மீனம்:
பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். ரேவதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740867777.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!