வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 07 (March 07)

#people #history #Lanka4
Prasu
3 weeks ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 07 (March 07)

கிரிகோரியன் ஆண்டின் 66 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 67 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 161 – உரோமைப் பேரரசர் அந்தோனினசு பயசு இறந்தார். அவரது வளர்ப்பு மகன்கள் மார்க்கசு ஒரேலியசு, லூசியசு வெர்சசு ஆகியோர் புதிய பேரரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 321 – உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் ஞாயிற்றுக்கிழமையை ஐரோப்பாவில் ஓய்வு நாளாக அறிவித்தார்.
  • 1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
  • 1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
  • 1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
  • 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
  • 1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.
  • 1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
  • 1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
  • 1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
  • 1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
  • 1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
  • 1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.[1]
  • 1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இசுலாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
  • 1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.
  • 1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், "இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது," என அறிவித்தார்.
  • 1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
  • 1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.
  • 1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.
  • 1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
  • 2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100% தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.
  • 2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.
  • 2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.
பிறப்புகள்

  • 1765 – யோசெப் நிசிபோர் நியெப்சு, ஒளிப்படவியலைக் கண்டுபிடித்த பிரான்சியர் (இ. 1833)
  • 1792 – ஜான் எர்ழ்செல், ஆங்கிலேயக் கணிதவியலாலர், வானியலாளர் (இ. 1871)
  • 1837 – என்றி டிரேப்பர், அமெரிக்க மருத்துவர், வானியலாளர் (இ. 1882)
  • 1839 – லுட்விக் மோண்ட், செருமானிய-பிரித்தானிய வேதியியலாளர் மற்றும் தொழிலதிபர் (இ. 1909)
  • 1853 – வே. அகிலேசபிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1910)
  • 1866 – கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (இ. 1944)
  • 1886 – ப. அ. தோமசு, யாழ்ப்பாணம் தோலகட்டி சுவாமிகள், இறை ஊழியர் (இ. 1964)
  • 1911 – அக்ஞேய, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1987)
  • 1919 – எம். என். நம்பியார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008)
  • 1938 – ஆல்பெர்ட் ஃவெர்ட், பிரான்சிய இயற்பியலாளர்
  • 1938 – டேவிட் பால்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
  • 1944 – மைக்கேல் ரோபாஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர், மரபியலாளர்
  • 1945 – தி. வே. சங்கரநாராயணன், தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 2022)
  • 1949 – குலாம் நபி ஆசாத், இந்திய அரசியல்வாதி
  • 1952 – விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாளர்
  • 1958 – ஆலன் ஏல், அமெரிக்க வானியலாளர்
  • 1960 – பரத்வாஜ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
  • 1968 – ராஜூ சுந்தரம், இந்திய நடன இயக்குநர்
  • 1970 – ரேச்சல் வய்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1741292151.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!