வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 08 (March 08)

#people #history #Lanka4
Prasu
3 weeks ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 08 (March 08)

கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1010 – பிர்தௌசி தனது சா நாமா என்ற இதிகாசத்தை எழுதி முடித்தார்.
  • 1576 – எசுப்பானிய நாடுகாண் பயணி தியேகோ கார்சியா டி பலாசியோ முதன்முறையாக பண்டைய மாயன் நகரமான கொப்பானின் எச்சங்களைக் கண்ணுற்றார்.
  • 1618 – யோகான்னசு கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
  • 1658 – வடக்குப் போர்களில் (1655–1661) ஏற்பட்ட பெரும் தோல்விகளை அடுத்து, டென்மார்க்-நார்வே மன்னர் மூன்றாம் பிரெடெரிக் தனது பகுதியின் அரைவாசிப் பகுதியை சுவீடனிடம் இழந்தார்.
  • 1702 – ஆன் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து ஆகிய இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார்.
  • 1722 – ஈரானின் சபாவித்து அரசு ஆப்கானித்தானின் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1736 – அப்சரித்து வம்சத்தின் நிறுவனர் நாதிர் ஷா ஈரானின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
  • 1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய 96 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
  • 1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
  • 1844 – முதலாம் ஆசுக்கார் சுவீடன்-நார்வே மன்னராக முடிசூடினார்.
  • 1868 – சப்பானிய சாமுராய் சக்காய் நகரில் 11 பிரெஞ்சுக் கடற்படையினரைக் கொன்றான்.
  • 1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1908 – திருநெல்வேலி எழுச்சி 1908: திருநெல்வேலியில் பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
  • 1910 – ரேமொன்டே டெ லாரோச் என்ற பிரான்சியர் வானோடிக்கான உரிமத்தைப் பெற்று, உலகின் முதலாவது பெண் வானோடியானார்.
  • 1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
  • 1917 – பன்னாட்டு பெண்கள் நாள் ஆர்ப்பாட்டம் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்றது. இதுவே பெப்ரவரிப் புரட்சியின் (பழைய யூலியன் நாட்காட்டியில் பெப்ரவரி 23) ஆரம்பமாகும்.
  • 1920 – முதலாவது நவீன அரபு நாடு சிரிய அரபு இராச்சியம் உருவாக்கப்பட்டது.
  • 1921 – எசுப்பானியப் பிரதமர் எதுவார்தோ டாட்டோ மத்ரிதில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் உயிரிழந்தனர்.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய இராணுவம் இடச்சுக் கிழக்கிந்திய இராணுவத்தை நிபந்தனையின்றிச் சரணடைய இறுதி எச்சரிக்கையை விடுத்தது.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை சப்பான் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கைப்பற்றியது.
  • 1947 – பெப்ரவரி 26 எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து சீனக் குடியரசின் 13,000 இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் தைவானில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1949 – வியெட்நாமிற்கு பிரான்சிடம் இருந்து அதிக சுயாட்சி வழங்குவதற்கும், வியட் மின்-தலைமையிலான வியட்நாம் சனநாயகக் குடியரசிற்கு எதிராக வியட்நாம் நாட்டை உருவாக்குவதற்கும் பிரெஞ்சு அரசுத்தலைவர் வின்சென்ட் ஓரியோலிற்கும், முன்னாள் வியட்நாம் பேரரசர் பாவோ டாயிற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது.
  • 1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
  • 1957 – சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் எகிப்து சூயஸ் கால்வாயை முதல் தடவையாகத் திறந்தது.
  • 1963 – சிரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு பஹாத் கட்சி ஆட்சிக்கு வந்தது.
  • 1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
  • 1971 – ஜோ பிரேசியர், முகம்மது அலி ஆகியோருக்கிடையேயான புகழ்பெற்ற நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை ஆரம்பமானது. இப்போட்டியில் பிரேசியர் 15 சுற்றுகளில் வென்றார்.
  • 1979 – பிலிப்சு நிறுவனம் குறுவட்டை முதற்தடவையாக அறிமுகம் செய்தது.
  • 1983 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்தை தீய பேரரசு என வர்ணித்தார்.
  • 1985 – லெபனான், பெய்ரூத் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில், 45 பேர் கொல்லப்பட்டனர், 175 பேர் காயமடைந்தனர்.
  • 2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 மாயமாக மறைந்தது.
பிறப்புகள்

  • 1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1613)
  • 1879 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1968)
  • 1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973)
  • 1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987)
  • 1934 – ம. லெ. தங்கப்பா, தமிழக எழுத்தாளர் (இ. 2018)
  • 1936 – ச. சாமிவேலு, மலேசிய அரசியல்வாதி (இ. 2022)
  • 1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
  • 1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 2024)
  • 1976 – பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
  • 1990 – பெத்ரா கிவிதோவா, செக் டென்னிசு வீராங்கனை

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741383792.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!