காலநிலை மாற்றத்தால் அவதிப்படும் மக்கள்
#SriLanka
#weather
Dhushanthini K
2 months ago

எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும்.
எனினும், இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் பெய்யக்கூடிய ஒரு சில மழையைத் தவிர, நாட்டின் வானிலை பெரும்பாலும் மழையற்றதாகவே இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




