தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் மரணம்
#Death
#Accident
#Bus
#SouthAfrica
Prasu
13 hours ago

தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



