இன்றைய ராசிபலன் (15.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

#SriLanka #Astrology #Rasipalan #Todayrasipalan
Dhushanthini K
1 month ago
இன்றைய ராசிபலன் (15.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எண்ணியது நிறைவேறும். முயற்சி லாபமாகும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றும்.பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலை சீராகும். வழக்கில் வெற்றியுண்டாகும். செல்வாக்கு உயரும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர். எதிலும் கவனம் தேவை.ரோகிணி: பழைய செயலில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி லாபம் தரும். திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. தாய்வழி உறவுகள் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்: 

புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கு இன்று லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். பூசம்: சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.ஆயில்யம்: சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல் வெற்றியாகும். இழுபறியானது சாதகமாகும்.

சிம்மம்: 

மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.பூரம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். கடன் பிரச்சினை குறையும்.உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரனும் கேதுவும் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவை. அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் துணிச்சலாக செயல்படுவீர்.சித்திரை 1,2: தொழிலில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு முன்நின்று தீர்வு காண்பீர்.

துலாம்: 

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வாகனத்தால் செலவு ஏற்படும். வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை தேவை.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவும், மனக்கவலையும் ஏற்படும். அவசர வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: நினைப்பது நடைபெறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உழைப்போரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு வேண்டாம்.அனுஷம்: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர் அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.கேட்டை: இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும். தேவை பூர்த்தியாகும்.

தனுசு: 

மூலம்: கனவு நனவாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அனுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். சனியால் முன்னேற்றம் உண்டாகும்.உத்திராடம் 1: பண நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். எதிர்பார்ப்போடு மேற்கொண்ட முயற்சி லாபமாகும்.திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.பூரட்டாதி 1,2,3: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுவது அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மீனம்:

 பூரட்டாதி 4: உங்கள் செயல் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: உடன் பணிபுவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.ரேவதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். விலகிச்சென்ற நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1742045079.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!