வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து : 51 பேர் பலி!
#SriLanka
#Accident
#fire
Thamilini
10 months ago
வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதில் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இசை நிகழ்ச்சியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
