பொய் செய்தி : கதிரை வளரவும் இல்லை,தேயவும் இல்லை - விஞ்ஞான விளக்கம் அறியாத மக்கள்!

#SriLanka #Vavuniya #Bus
Thamilini
1 year ago
பொய் செய்தி : கதிரை வளரவும் இல்லை,தேயவும் இல்லை - விஞ்ஞான விளக்கம் அறியாத மக்கள்!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில், எங்குமில்லாதவாறு, அதிசயக்கத் தக்க கதிரைகளை காணமுடிவதாக நண்பர்கள் சிலர் சொன்னார்கள். விசயம் அறிந்து விரைந்தோடிச் சென்று பார்த்தோம்.

 உண்மையில், இலங்கையின் எப்பாகத்திலும் இது போன்ற கதிரைகளை, நாம் இதுவரை பார்த்ததில்லை. இக்கதிரைகள் வளர் பிறை காலத்தில் வளர்வதாகவும், தேய்பிறை காலங்களில் தேய்வதாகவும் சொல்கிறார்கள்.

 சிலரோ மாதத்திற்கு " ஒரு இஞ்ச்" அளவு வளர்ந்து கொண்டு வருவதாக கூறுகின்றனர்..! இல்லை இல்லை, இது முற்றிலும் பொய், இது மாதம் தோறும் தேய்ந்து கொண்டு செல்வதாக சிலர் சொல்கிறார்கள்.

images/content-image/1742296213.jpg

சிலர் சொல்கிறார்கள்., இக் கதிரைகளில் அமர்ந்தால், தீராத நோய்களெல்லாம் குணமாகுமாம். 

 இதில் எது உண்மை என்று புரியாத குழப்பத்தில் பலர் தலையை போட்டு பிய்த்துக் கொள்கிறார்களாம். 

 உரிய கதிரைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் தான், உண்மை புலனாகும் என்று, விசயமறிந்த வாட்டாரங்கள் முணுமுணுக்கின்றனர்..! பொறுத்திருந்து பார்த்தால் தான் எது உண்மை என்று புலனாகும்.

இதுதான் உண்மை!

இது தொடர்பான மிகைப் படுத்தல் செய்திகளே அதிகமாக உள்ளது. நோய் தீர்க்கும் கதிரை என்பது பொய்யான செய்தியாகும். அதிவும் சில ஊடகங்கள் முக நூல்களில் எழுதுவதுமன வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742295949.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4