வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 20 (March 20)

#people #history #Lanka4
Prasu
5 hours ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? மார்ச் 20 (March 20)

கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
  • 1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
  • 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
  • 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
  • 1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
  • 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி "நூறு நாட்கள்" ஆட்சியை ஆரம்பித்தான்.
  • 1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
  • 1864 – இலங்கையின் பிரபலமான கொள்ளைக்காரன் உத்துவான்கந்தை சூர சார்டீல் என்பவன் கேகாலை, மாவனெல்லையில் கைது செய்யப்பட்டான். பின்னர் 1964 மே 7 இல் தூக்கிலிடப்பட்டான்.[1]
  • 1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • 1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.
  • 1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
  • 1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.
  • 1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.
  • 1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.
  • 1942 – போலந்தில் நாட்சி செருமனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
  • 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
  • 1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
  • 1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.
  • 1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.
  • 1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.
  • 1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ், கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
  • 1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.
  • 2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
  • 2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
  • 2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.
  • 2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.

பிறப்புகள்

  • கிமு 43 – ஆவிட், உரோமைப் புலவர் (இ. 17)
  • 1615 – தாரா சிக்கோ, முகலாய இளவரசர் (இ. 1659)
  • 1737 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)
  • 1811 – பிரான்சின் இரண்டாம் நெப்போலியன் (இ. 1832)
  • 1828 – என்ரிக் இப்சன், நோர்வே கவிஞர், இயக்குநர் (இ. 1906)
  • 1904 – பி. எப். ஸ்கின்னர், அமெரிக்க உளவியலாளர் (இ. 1990)
  • 1906 – பாவெல் பெத்ரோவிச் பரெனாகோ, உருசிய-சோவியத் அறிவியளாளர், வானியலாளர் (இ. 1960)
  • 1920 – பெலிக்சு யூரியேவிச் சீகல், சோவியத் வானியலாளர் (இ. 1988)
  • 1921 – பி. சி. அலெக்சாண்டர், இந்திய அரசியல்வாதி (இ. 2011)
  • 1925 – டேவிட் வாரன், ஆத்திரேலிய அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் (இ. 2010)
  • 1940 – புலவர் அரசு, தமிழக எழுத்தாளர்
  • 1940 – சி. பத்மநாதன், இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்
  • 1942 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 1994)
  • 1942 – முத்துலிங்கம், கவிஞர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
  • 1944 – எர்வின் நேயெர், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரி இயற்பியலாளர்
  • 1945 – எர்லிங் பிராண்ட்நெஸ், நோர்வே அரசியல்வாதி
  • 1957 – இசுப்பைக் லீ, அமெரிக்க நடிகர், இயக்குநர்
  • 1965 – வில்லியம் தால்ரிம்பில், இசுக்கொட்டிய வரலாற்றாளர்
  • 1966 – ஆல்கா யாக்னிக், இந்தியப் பாடகி
  • 1980 – கணேஷ் வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
  • 1986 – ரிச்சா கங்கோபாத்யாய், இந்தியத் திரைப்பட நடிகை
  • 1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை
  • 1987 – அரிச்சரண், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742418168.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!