வெற்றிடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு!
#SriLanka
#Astrology
#world_news
#Lanka4indianews
#LANKA4TAMILNEWS
#gun
Dhushanthini K
3 days ago

வெற்றிடம் ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் நேற்று (27) மாலை தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பந்துரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, மற்றும் தோட்டாக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




