உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 28 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

2 என்ற சந்திரனும் 9 என்ற செவ்வாயும் இணைந்த
இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது
இந்த எண்ணாகும் .
" காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர
சாஸ்திர நூல்களிலும் " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன்
நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .
கடக
ராசியில் இந்த 29 ம் எண் இடம்பெறுவதால் 2 என்ற சந்திரனின் ஆட்சி
பலத்தையும் 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் இவ்வெண் தெரிவிக்கிறது .
பூமி
லாபமும் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் பெண்களுக்கு மங்களகரமான
வாழ்க்கையையும் சுக பிரசவமும் கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் நீர்
சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் .
ஸ்ரீ வெங்கடேச
சுப்ரபாதம் 29 பாடல்களால் தருவதை போல பெயரிலோ இந்த 29 ம் எண்ணை
அமையபெற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு வருவதன் மூலம் சிறந்த நிலை
எய்தலாம் .
" கிரீடத்தை விட்டு விலகி வருதலையும் " கிரீடத்தாலேயே
இடறி கொள்வதையும் இந்த எண்ணை பற்றி மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
இதன் பொருள் என்னவென்றால் " மகுடம் தரித்த மன்னவனிடம் தனது தகுதியை
உணர்ந்து தனது பதவியை காப்பாற்றி கொள்ள மாட்டன் எனபதே ஆகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



