இன்றைய ராசிபலன் (29.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 days ago
இன்றைய ராசிபலன் (29.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நேற்றைய முயற்சி நிறைவேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்புகள் விலகும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: யோகமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை எளிதாக நடக்கும். ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: நெருக்கடி விலகும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத் தடை விலகும். வேலைத் தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.திருவாதிரை: உங்கள் வேலை எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும்.

கடகம்:
புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரியோர் ஆதரவால் வேலை எளிதாக முடியும். குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்.பூசம்: ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

சிம்மம்:
மகம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குண்டான எதிர்ப்பு குறையும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. ஒவ்வொன்றையும் யோசித்து செயல்படவும்.பூரம்: திட்டமிட்ட வேலைகளை ஒத்தி வைப்பீர். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். பிறர் செயல் உங்களை சங்கடப்படுத்தும். வாகனப் பயணத்தில், இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி:
உத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் உங்கள் வேலை எதிர்பார்த்தபடி நடந்தேறும். புதிய முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.சித்திரை 1,2: நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மதிப்புண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.

விருச்சிகம்:
விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.

தனுசு:
மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறை வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திராடம் 1: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் வேலை நடக்கும். வருமானத்தில் இருந்த தடை விலகும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் வெற்றியாகும்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.அவிட்டம் 1,2: சகோதரர்கள் உதவியுடன் வேலைகள் நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குரு பார்வை படுவதால் முயற்சி வெற்றியாகும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: லாபமான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். திட்டமிட்ட வேலை திட்டமிட்டபடி நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பழைய கடன்களை அடைப்பீர்.

மீனம்:
பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னை தோன்றும். சுயவேலையில் மட்டும் கவனம் தேவை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1743200649.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!