இன்றைய ராசிபலன் (30.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நினைப்பதை நடத்தி
முடிக்கும் நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும்
வேலையில் லாபம் கிடைக்கும்.பரணி: செலவு அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சி
வெற்றியாகும். அவசியமான வேலைகளில் மட்டும் கவனத்தை செலுத்தவும்.கார்த்திகை
1: வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க
வேண்டாம். உங்கள் வேலை இழுபறியானாலும் மாலையில் நடக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: எண்ணியது நடந்தேறும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி:
வழக்கமான வேலைகளில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை
விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.மிருகசீரிடம் 1,2:
நீங்கள் நினைத்தது இன்று எளிதாக நிறைவேறும். செல்வாக்கு உயரும். செயல்
லாபமாகும். மாலையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். பணியாளர் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவாதிரை: திட்டமிட்டு
செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி
செய்வீர். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் அடிப்படைத்
தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் லாபம் தரும். சிறு
வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
கடகம்:
புனர்பூசம் 4:
முன்னேற்றமான நாள். குடும்பத்தில் உள்ள பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும்.
மனக்குழப்பம் விலகும்.பூசம்: வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொள்ளும்
முயற்சி லாபமாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: திட்டமிட்டபடி
உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
யாரையும் நம்பி எதிலும் இன்று ஈடுபட வேண்டாம்.
சிம்மம்:
மகம்:
நெருக்கடி விலகும் நாள். இன்று மாலை வரை உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும்
இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.பூரம்: கவனமாக செயல்படுவதால்
நெருக்கடி நீங்கும். புதிய முயற்சி இன்று மாலை வரை வேண்டாம். உடன்
இருப்போரை அனுசரித்து செல்வது அவசியம்.உத்திரம் 1: நெருக்கடியிலும் நன்மை
அடைவீர். எதிர்பாராத பிரச்னை தோன்றும். அதை சமாளிப்பீர். பெரியோர் ஆதரவு
கிடைக்கும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய
நாள். இன்று மாலை வரை உங்கள் வேலை லாபமாகும். சந்திராஷ்டமம் தொடங்குவதால்
எச்சரிக்கை அவசியம்.அஸ்தம்: வியாபாரம் முன்னேற்றமடையும். வரவேண்டிய பணம்
வரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும்.சித்திரை 1,2:
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வருமானத்தை அடைவீர். வாழ்க்கைத்துணையின்
ஆதரவுடன் உங்கள் வேலைகளை முடிப்பீர்கள்.
துலாம்:
சித்திரை 3,4:
யோகமான நாள். தடைகளைத்தாண்டி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். நீண்டநாள்
எதிர்பார்ப்பு நிறைவேறும்.சுவாதி: தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர்.
இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் ஆதரவால் முயற்சி
வெற்றியாகும்.விசாகம் 1,2,3: செயலில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தினர்
தேவைகளைப் பூர்த்தி செய்வீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம்
திருப்தி தரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நன்மையான நாள்.
இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். சந்திக்க நினைத்தவரை
சந்திப்பீர்கள்.அனுஷம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சி இன்று
வேண்டாம்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூர்வீக
சொத்தில் மேற்கொண்ட பேச்சு தள்ளிப்போகும். உழைப்பாளர் நிலை உயரும்.
தனுசு:
மூலம்:
உழைப்பால் உயர்வுகாணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள்
முயற்சியில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும்.பூராடம்: நண்பர்கள் ஆதரவு நன்மை தரும். பணிபுரியும் இடத்தில்
கொடுத்த வேலையை செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும் நாள்.உத்திராடம் 1:
இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிறு வியாபாரிகளுக்கு
எதிர்பார்த்த வருமானம் வரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: கவனமாக
செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்
ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.திருவோணம்: வரவேண்டிய பணம்
வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.அவிட்டம் 1,2: குடும்பத்தில்
ஏற்பட்ட பிரச்னை விலகும். செயல் வெற்றியாகும். நண்பர்கள் உதவியால் வேலை
நடக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள்.
வியாபாரிகள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள்
செல்வாக்கு உயரும் நாள்.சதயம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் அமைதி
உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பணவரவு அதிகரிக்கும். செயல் லாபமாகும். பழைய கடன்களை அடைப்பீர்.
மீனம்:
பூரட்டாதி
4: மகிழ்ச்சியான நாள். நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக
செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட
குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும்.
மனம் தெளிவடையும்.ரேவதி: மதியம்வரை இழுபறியாக இருந்த வேலை மாலையில்
நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



