வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஏப்ரல் 10 (April 10)

#people #history #Lanka4
Prasu
1 week ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஏப்ரல் 10 (April 10)

கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது.
  • 1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார்.
  • 1656 – இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது.[1]
  • 1658 – ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது.[2]
  • 1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
  • 1741 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: புருசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
  • 1809 – நெப்போலியப் போர்கள்: ஆஸ்த்திரியப் படை பவேரியாவை ஊடுருவியது.
  • 1815 – இந்தோனீசியாவில் தம்போரா எரிமலை வெடித்ததில் பல தீவுகள் அழிந்தன. சூலை 15 வரை இது நீடித்தது. 71,000 பேர் உயிரிழந்தனர்.
  • 1821 – கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி உதுமானிய அரசினால் தூக்கிலிடப்பட்டு, அவரது உடல் பொசுபோரசு நீரிணையில் எறியப்பட்டது.
  • 1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
  • 1858 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் 14.5 தொன் பிக் பென் மணி சோதனையின் போது வெடித்ததை அடுத்து, தற்போதைய 13.76 தொன் மணி அமைக்கப்பட்டது.
  • 1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
  • 1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய-இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1872 – முதலாவது மர நாள் நெப்ராஸ்காவில் கொண்டாடப்பட்டது.
  • 1887 – உயிர்ப்பு ஞாயிறு அன்று அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அனுமதி அளித்தார்.
  • 1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
  • 1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
  • 1963 – ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.
  • 1968 – நியூசிலாந்தின் வாகைன் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்தில் புயலினால் தாக்கப்பட்டு மூழ்கியதில், 734 பேரில் 53 பேர் உயிரிழந்தனர்.
  • 1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 போர் வானூர்திகள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
  • 1973 – சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108 பேர் உயிரிழந்தனர்.
  • 1979 – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
  • 1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
  • 1991 – இத்தாலியின் மொபி பிரின்சு என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் உயிரிழந்தனர்.
  • 1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
  • 1998 – பெல்பாஸ்ட் உடன்பாடு: அயர்லாந்துக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த உடன்பாடு எட்டப்பட்டது.
  • 2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
  • 2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
  • 2010 – போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோலென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில், போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி, அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96 பேர் உயிரிழந்தனர்.
  • 2016 – கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து: கேரளா பரவூரில் பண்டிகைக் கால வாணவெடிகள் வெடித்து தீ பரவியதில் நூற்றுக் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1755 – சாமுவேல் ஹானிமன், செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ. 1843)
  • 1829 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ. 1912)
  • 1847 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911)
  • 1865 – ஜாக் மைனர், அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944)
  • 1887 – பெர்னார்டோ ஊசே, நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971)
  • 1894 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1983)
  • 1898 – ஆபிரகாம் கோவூர், இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978)
  • 1917 – இராபர்ட் பர்ன்சு உட்வார்ட், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1979)
  • 1927 – ஏ. சி. எஸ். ஹமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
  • 1931 – கிஷோரி அமோன்கர், இந்துத்தானிப் பாடகர் (இ. 2017)
  • 1932 – உமர் சரீப், எகிப்திய நடிகர் (இ. 2015)
  • 1950 – எடீ ஹேசல், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992)
  • 1952 – ஸ்டீவன் சீகல், அமெரிக்க நடிகர்
  • 1957 – அலிக்கோ டங்கோட்டே, நைஜீரியத் தொழிலதிபர்
  • 1959 – இரா. கோபால், தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
  • 1979 – இரேச்சல் கோரீ, அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003)
  • 1980 – சார்லீ ஹூன்னம், ஆங்கிலேய நடிகர்
  • 1986 – நாமல் ராசபக்ச, இலங்கை அரசியல்வாதி
  • 1986 – ஆயிஷா தாக்கியா, இந்திய நடிகை
  • 1990 – அலெக்ஸ் பெட்டிஃபேர், ஆங்கிலேய நடிகர்
  • 1995 – இயன் நெல்சன், அமெரிக்க நடிகர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744236658.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!