வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஏப்ரல் 13 (April 13)

#people #history #Lanka4
Prasu
5 days ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? ஏப்ரல் 13 (April 13)

கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார்.
  • 1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது.
  • 1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார்.
  • 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர்.
  • 1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் வாக்களிக்கவும், நாடாளுமன்றத்தில் அமரவும் உரிமை அளித்தது.
  • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்டர் கோட்டை கூட்டமைப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
  • 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வட கரொலைனா மாநிலத் தலைநகர் ராலீ அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தது.
  • 1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 60 ஆபிரிக்க அமெரிக்கர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1919 – ஜலியான்வாலா பாக் படுகொலை: அமிருதசரில் ஜலியான்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் கொல்லப்பட்டனர். 1200 பேர் காயமடைந்தனர்.
  • 1930 – மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை (வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்) தொடங்கப்பட்டது.
  • 1939 – இந்தியாவில் பிரித்தானியர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
  • 1941 – சப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக செருமனி அறிவித்தது.
  • 1944 – நியூசிலாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பண்ணுறவாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர், அரசியல் கைதிகள் நட்சிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத், பல்கேரியப் படையினர் வியென்னா நகரைக் கைப்பற்றினர்.
  • 1948 – எருசலேமில், அதாசா மருத்துவமனையில் இடம்பெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் 78 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1953 – இயன் பிளெமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
  • 1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
  • 1960 – ஐக்கிய அமெரிக்கா டிரான்சிட் 1-பி என்ற உலகின் முதலாவது செய்மதி இடஞ்சுட்டல் தொகுதியை விண்ணுக்கு ஏவியது.
  • 1970 – நிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிசன் தாங்கி வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டது.
  • 1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக புவி நிலைத் துணைக்கோள் வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
  • 1975 – லெபனானில் 27 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு 15-ஆண்டுக்கால உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1976 – பின்லாந்தில் வெடிபொருள் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 1979 – இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
  • 2003 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 21 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
  • 2012 – வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.
  • 2017 – ஆப்கானித்தான், நங்கர்காரில் அமெரிக்கா மிகப்பெரும் வெடிகுண்டை வீசியது.


பிறப்புகள்

  • 1570 – கை பாக்சு, வெடிமருந்து சதித்திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1606)
  • 1743 – தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ. 1826)
  • 1817 – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக், பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906)
  • 1901 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1981)
  • 1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)
  • 1913 – மே. ரா. மீ. சுந்தரம், தமிழக எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
  • 1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)
  • 1930 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (இ. 2019)
  • 1940 – ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-மொரீசிய எழுத்தாளர்
  • 1949 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 2011)
  • 1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை அரசியல்வாதி
  • 1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
  • 1963 – காரி காஸ்பரொவ், உருசிய சதுரங்க ஆட்ட வீரர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744496011.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!