பிரான்ஸில் சிறைச்சாலைகளை குறிவைத்து தாக்குதல் - மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்கிறது அரசாங்கம்!
#SriLanka
#France
#Prison
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 days ago

நாடு முழுவதும் சிறைச்சாலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் அலைக்குப் பிறகு, அரசாங்கம் "மிரட்டல் செயல்களுக்கு" அடிபணியாது என்று பிரான்சின் நீதி அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு பிரான்ஸில் உள்ள பெரும்பாலான சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. வளாகத்தில் இருந்து கார்கள் எரிக்கப்பட்டன.
அத்துடன் அரசாங்க அதிகாரிகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே பிரான்ஸின் நீதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு பிரான்சில் உள்ள டூலோன், ஐக்ஸ்-என்-புரோவென்ஸ், மார்சேய், வேலன்ஸ் மற்றும் நீம்ஸ் மற்றும் பாரிஸுக்கு அருகிலுள்ள வில்பிண்டே மற்றும் நான்டெர் ஆகிய இடங்களில் ஏழு சிறைச்சாலைகள் குறிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ VIDEO)
அனுசரணை



