காலி கோட்டை சுவரில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன் மரணம்
#SriLanka
#Death
#Student
#Lanka4
#University
Prasu
10 hours ago

காலி கோட்டை சுவரிலிருந்து , ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். 21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே கோட்டை சுவரிலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன், காவல்துறை அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



