கொத்மலை பேருந்து விபத்து - நால்வரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

#SriLanka #Accident #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
கொத்மலை பேருந்து விபத்து - நால்வரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ரம்பொட - கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை கொத்மலை மருத்துவமனையில் இருந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நாவலப்பிட்டி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஜனக சோமரத்ன தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான பேருந்து தற்போது கொத்மலை பொலிஸ் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், கதிர்காமம் டிப்போவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் நேற்று (12) பேருந்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வந்துள்ளனர்.

கொத்மலை பொலிஸ் பரிசோதகர் வஜிர தேவப்பிரிய, பேருந்தை ஆய்வு செய்து, பின்னர் வழங்கப்படும் அறிக்கைகளை எதிர்கால பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றும், அதுவரை, இந்த விபத்து தொடர்பான உண்மைகளை வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746915357.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4