இன்றைய ராசிபலன் (19.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (19.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:

அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சுமூகமான நிலை உண்டாகும்.பரணி: உங்கள் அணுகுமுறையால் நினைத்தை சாதிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வருமானம் திருப்தி தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் வரும்.மிருகசீரிடம் 1,2: நினைப்பதை சாதிப்பீர்கள். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் பெருகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.திருவாதிரை: சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்வீர். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.

கடகம்:
புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்கள் செயல் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய நட்பால் கனவு நனவாகும்.

சிம்மம்:
மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.பூரம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு சாதகமாகும்.உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். முயற்சி லாபமாகும். சேமிப்பில் கவனம் செல்லும். அரசு வழியில் நன்மை உண்டு.

கன்னி:
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நட்பால் நன்மை கூடும்.சித்திரை 1,2: உறவினர்கள் உதவியால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

துலாம்:
சித்திரை 3,4: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். சுவாதி: திட்டமிட்டிருந்த வேலைகளை மாற்றம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

விருச்சிகம்:
விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும்.அனுஷம்: உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். பிறரால் செய்ய முடியாத வேலையை செய்து முடிப்பீர்.கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

தனுசு:
மூலம்: நன்மையான நாள். குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த வேலை நடக்கும்.பூராடம்: வருவாய் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நேற்றைய பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும். மனக்குழப்பம் விலகும்.திருவோணம்: எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்:
அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: குடும்பத்தினர் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். மனதில் சலிப்பு தோன்றும். இன்றைய நாளில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

மீனம்:
பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதம் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அனுசரித்துச் செல்வது நல்லது.ரேவதி: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை லாபத்துடன் நடக்கும்.



லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747606912.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!