அமெரிக்காவில் தங்கியுள்ள பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நவம்பர் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது மாத்தறை பகுதியில் சட்டவிரோதமாக சம்பாதித்த 50 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட ஒரு நிலம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
"இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான கௌரவ பசில் ராஜபக்ஷ, செப்டம்பர் 18, 2024 அன்றில் இருந்து இன்று வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்து, நியாயமான காரணங்களை வழங்காமல் நீதிமன்றத்தைத் தவிர்ப்பதற்காக வாரண்ட் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பசில் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், "ஐயா, எனது கட்சிக்காரர் மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடு திரும்புவதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் அமெரிக்காவில் இருந்தார், நாற்காலியில் இருந்து விழுந்து கழுத்து மற்றும் நரம்பு பிரச்சனைகளால் அவதிப்பட்டு விபத்துக்குள்ளானார். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் அவரை 6 மாதங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளனர்."
இதனைத் தொடர்நது மருத்துவ அறிக்கைகளில் முரண்பாடுகள் இருப்பதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இந்நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



