இறைவனுக்கு தொண்டு செய்ய நினைத்தாலே ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும்!

இறைவனுக்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று மனதால் நினைத்துவிட்டாலே போதும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் குறைக்கப்படுகிறது
ஒரு விவசாயி உரம் வாங்குவதற்காக நகரத்திற்குச் சென்று வரும் வழியில் ஒரு ஜோசியர் வீட்டை பார்த்தார். தன்னுடைய ஜாதகம் கையில் இருக்கவே அதை அவரிடம் காட்டி பலன்களைக் கேட்டார். ஜோசியர் ஜாதகத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டார் இன்னம் 24 மணி நேரத்தில் இந்த விவசாயி இறக்கப்போகிறார் என்று.அதை இப்போது சொல்ல வேண்டாம்
என்று நினைத்து, உங்களுக்கு நல்ல காலம் விரைவில் தொடங்கவிருக்கிறது; நாளை இதே நேரம் இங்கு வந்தால் நாம் மேலும் பேசலாம் இப்போது எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்
விவசாயி ஊரை நோக்கி நடந்தார். சிறிது நேரத்தில் இடி, மின்னல், மழை வலுக்க தொடங்கியது. இரவில் பாதையை தவறவிட்டார். எங்கோ சென்று மழையிடமிருந்து தப்பிக்க ஒரு பழைய மண்டபத்திற்குள் சென்றார்.
சிறிது நேரத்தில், அது ஒரு சிவன் கோயில் என்று புரிந்து கொண்டார். பாழடைந்த அந்த சிவன் கோயிலை கண்டு மனதுக்குள் வருந்தினார்
என்னிடம் செல்வம் இருந்தால், இந்த மண்டபத்தை சீரமைத்து கோயில் குடமுழுக்கு நடத்துவேன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அப்படியே உறங்கி விட்டார் .
அப்போது அருகில் "உஸ்உஸ்" என்று சத்தம் வர தூக்கம் களைந்து எழுந்து திரும்பிப்பார்த்தால் மின்னல் ஓளியில் ஒரு கரு நாகம் படமெடுத்து ஆடி இவனை தீண்ட வந்தது . மழையில் இடி இடித்து அந்த இடி கருநாகத்தை தாக்கி நாகமும் இறந்தது
மறு நாள் மாலை நேரம், ஜோசியரை பார்த்தார். ஜோசியருக்கு ஒன்றும் புரியவில்லை.இவர் இந்நேரம் இறந்திருக்கவேண்டும். எப்படி உயிருடன் இருக்கிறார் என்று நினைத்து பழைய ஜோசிய நூல்களையெல்லாம் ஆராய்ந்தால், இவர் ஒரு பாம்பு கடித்தோ அல்லது தலையில் ஏதாவது ஒன்று விழுந்தோ அவர் இறந்திருக்க வேண்டும் என்று இருந்தது.
ஜோசியருக்கு ஒன்றும் விளங்கவில்லை. உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தால் இதிலிருந்து தப்பிக்கலாமா என்று பார்த்தால், ஒரே ஒரு பரிகாரம் போட்டிருந்தது. ஒரு சிவன் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தினால் இவர் தப்பிக்கலாம் என்று.
ஜாதகம் உண்மையா பொய்யா என்று நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் பரிகாரம் என்பதும் அப்படிதான் . ஒருவனுக்கு ஜாதக அமைப்புப்படி விபத்தில் கால் ஒன்று இழக்க நேரிடும் என்று அமைப்பு இருந்தால் கடவுள் மீது நம்பிக்கை வைத்து பரிகாரம் செய்வது காலுக்கு வரும் இழப்புக்கு காலின் விரல் பாதிப்போடு நின்று விடும் . ஜாதகப்படி ஒரு குறிப்பிட்ட தசா புத்தி காலங்களில் ரத்த இழப்பு ஏற்படும் என்ற அமைப்பு இருந்தால் அந்த ஜாதகர் ரத்த தானம் செய்வதால் அந்த விபத்து தவிர்க்கப்படுகிறது . இது அனுபவத்தில் கண்ட உண்மை ?
மேலதிக தகவல் அறிய
ஜோதிடர் :R.ராவணன் .
B.Sc ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில், கலுங்குமேடு அண்ணாமலை நகர், சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers: 91 + 812273332
வாட்சப் எண்
91 + 7604917240
91 + 9384372941
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



