லஞ்சம் வாங்கியது யார்? உண்மையை உடைத்த இளங்குமரன் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Lanka4 #Salt #corruption #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 week ago
லஞ்சம் வாங்கியது யார்? உண்மையை உடைத்த இளங்குமரன் (வீடியோ இணைப்பு)

முன்னைய ஆட்சியாளர்கள் புலம்பெயர் முதலீட்டாளர்களிடம் தரகுப் பணம் கோரியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; புலம்பெயர் முதலீட்டாளர்கள் பலர் வடக்கில் உப்புத் தொழிற்சாலை நிறுவும் நோக்கில் கடந்த கால ஆட்சியாளர்களுடன் கடந்த காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன்போது கடந்த ஆட்சியாளர்கள் நேரடியாகவே புலம்பெயர் முதலீட்டாளர்களிடம் தரகுப் பணம் கேட்டிருப்பது தற்போது தெரியவருகிறது.

அது தொடர்பாக முதலீட்டாளர்கள் பலர் தற்போது எம்மிடம் முறையிட்டு வருகின்றனர். அவ்வாறான முதலீட்டாளர்கள் மீளவும் வடக்கில் தமது முதலீடுகளைச் செய்ய ஆர்வமாக உள்ளனர்.குறிப்பாக உப்பளம் அமைக்க சில இடங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

 அவ்வாறான சிறந்த வேலைத்திட்டங்களை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். அரசாங்கம் தற்போது வாகனங்களை இறக்குமதி செய்கின்றது.சாதாரண மக்களும் வாகனங்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு ஐம்பது இலட்சத்திற்கும் குறைந்த பெறுமதி கொண்ட வாகனங்களுக்கான ஆடம்பர வரி விலக்கப்பட்டுள்ளது. இதனூடாக சாதாரண மக்களும் வாகனங்களைக் கொள்வனவு செய்து தமது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு அதனைப் பயன்படுத்த முடியும். 


குறிப்பாக இலங்கையினுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டுவரும் நிலையில் வாகன இறக்குமதி அவசியமானதொன்றாகக் காணப்படுகின்றது. நாம் பல சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் எதிர்கட்சியினருடைய கோஷங்கள் உப்பைச் சுற்றியே உள்ளது. எதிர்கட்சியினர் பாராளுமன்றத்தை தமக்கான விளம்பர இடமாகவும்-குழப்பத்துக்குரிய இடமாகவுமே பயன்படுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஏழு மாதங்களே கடக்கின்றன. இந்த ஆட்சி ஐந்து வருடங்களைத் தாண்டி மேலும் பல வருடங்கள் நீடிக்கும். நாம் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

 மக்களுக்கு அரசாங்கம் மீது படிப்படியாக நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. இருப்பினும் மக்கள் மனங்களில் இன்றும் ஓர் பயம் உள்ளது.கடந்த ஆட்சியாளர்கள் 76வருடங்களாக மக்களை பயத்தின் மத்தியில் வைத்து ஆட்சி செய்துள்ளனர்.அவர்கள் தற்போதும் மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். அதற்காக பொய்களைக் கூறுகின்றனர்.

மாயைகளைத் தோற்றுவிக்கின்றனர். அண்மையில் கூட எரிபொருள் தட்டுப்பாடு வரப்போவதாக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அச்சத்திற்குள்ளாக்கினார்கள். 76வருடங்களாக பயத்தைக் காட்டி அரசியல் செய்து பழகி விட்டனர்

. மக்கள் மனங்களில் உள்ள பயம் நீங்க வேண்டும்.இன நல்லிணக்கம் மலர வேண்டும்.அதனூடாகவே நாட்டை முன்னேற்ற இயலும். தற்போது உப்பினை வைத்து அரசியல் செய்பவர்கள் கடந்த காலத்தில் எரிவாயு நாட்டில் இல்லாமல் இருந்ததனை நினைவில் கொள்ள வேண்டும். இன்று அந்த இக்கட்டான நிலைமையில் இருந்து நாடு மீண்டு ஸ்திரமடைந்து வருகிறது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைத் தூண்டும் முகமாக பல போலிப் பிரசாரங்களை பரப்பியிருந்தனர். என மேலும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

 இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு விடியோவைக் கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!