காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை

தனது தாயரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
தனது தாய் வாய் பேச மாட்டாதவர் என்றும் அவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றதாகவும், அவர் அங்கும் செல்லவில்லை என்றும், வீட்டிற்கும் செல்லவில்லை என்றும் தனது தாயார் முல்லைத்தீவு, மற்றும் பிலோமினா என்றும் மட்டுமே பேசத்தெரிந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் தொடர்பான தகவல் ஏதும் இருந்தால் தமது தொலைபேசி இலங்கங்களான 0775570692 தொடர்புகொண்டு அறிவித்துதவுமாறும் கோரியுள்ளார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



