கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணிநேரம் நீர் வெட்டு!
#SriLanka
#water
#Gampaha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 day ago

கம்பஹாவின் பல பகுதிகளில் இன்று (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா-எல, சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதியின் ஒரு பகுதியிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



