இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசினால், தெஹ்ரான் பற்றி எரியும்! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

#world_news #Missile #Israel #War #Lanka4 #Iran #SHELVAFLY
Mayoorikka
18 hours ago
இஸ்ரேல்  மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசினால், தெஹ்ரான் பற்றி எரியும்!  இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இதற்கிடையில் இஸ்ரேல் - ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.

 இஸ்ரேல் - ஈரான் பதற்றம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ், “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் எதிர் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. அமைதியும், ராஜதந்திரமும் மேலோங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, நேற்று ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​களை இஸ்ரேல் திடீர் தாக்குதலில் அழித்தது. 

இதில், ஈரானின் 6 அணுசக்தி விஞ்​ஞானிகள், 3 ராணுவ தளப​தி​கள் உயி​ரிழந்​தனர். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது ஈரான். இஸ்ரேலும், நாங்களும் திருப்பித் தாக்குவோம் என்று, ஃபைட்டர் ஜெட் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, தெஹ்ரானில் இருந்து 325 கிமீ தொலைவில் இருக்கும் ஜன்ஜன் நகரை தாக்கியுள்ளது.

 இதில் அந்த நகரமே பற்றி எரிகிறது. மோதல் நீடிக்கும் நிலையில், “ஈரானின் நூற்றுக் கணக்கான ஏவுகணைகள் மத்திய டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இஸ்ரேலின் அயன் டோம்(Iron Dome) பாதுகாப்பையும் மீறி நாம் தாக்குதல் நடத்தியுள்ளோம்.” என்று ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

 இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் சிவப்பு ரேகையை அத்துமீறிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மேலும் இரான் இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகளை வீசினால், தெஹ்ரான் எரியும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1749803680.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!