அதிகம் குருதிக்கொடை வழங்கிய கிளிநொச்சி இளைஞன்: அலரிமாளிகையில் கௌரவிப்பு
#SriLanka
#Kilinochchi
#BLOOD
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
1 year ago
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினமான இன்றைய தினம் அலரி மாளிகையில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அதிகம் குருதிக்கொடை வழங்கிய 40 பேர் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.. இதில் கிளிநொச்சியை சேர்ந்த கேதீஸ்வரன் லக்சுஜன் என்ற இளைஞரும் கௌரவிக்கபப்ட்டுள்ளார்.
30 வயதான இவர் 24 தடவைகள் குருதிக் கொடை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இளைஞன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் தொண்டராகவும் முதலுதவி இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
