இஸ்ரேல் ஈரான் போரினால் சர்வதேசம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்ளப் போகின்றதா?

#world_news #Israel #War #Lanka4 #Iran #SHELVAFLY
Mayoorikka
4 hours ago
இஸ்ரேல் ஈரான் போரினால் சர்வதேசம் மூன்றாம் உலகப் போரை எதிர்கொள்ளப் போகின்றதா?

போர் தொடங்கி ஒரு வாரம் ஆகியிருக்கிறது. இந்த 7 நாட்களில், ஈரான் அதிக அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. 

 அதேபோல, இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து தாக்கி அழித்துள்ளன. ஒரு கட்டத்தில் ஈரானிடம் ஏவுகணைகள் தீர்ந்து போகலாம். மறுபுறம் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம் செயலிழந்து போகலாம். இது இரண்டில் எது முதலில் நடக்கிறதோ, அவர்கள்தான் முதலில் தோல்வியை தழுவுவார்கள்.

20.06.2025 இன்று அதிகாலை ஈரான் ஏவிய ஏவுகணை மேற்கு இஸ்ரேலின் குடியிருப்பு கட்டடங்களை பிளந்தெறிந்தது.

 பல ரஷ்ய அணு விஞ்ஞானிகள் ஈரானின் அணு குண்டு உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ளனர். அணுக்குண்டு தயாரிப்பு 90 வீதம் முடிவடைந்து விட்டது. ஈரான் அடுத்த சில வாரங்களில் அணுக்குண்டு சோதனையை வெற்றி கரமாக நிகழ்த்தும். 

அதுவரை ரஷ்யாவின் அணு விஞ்ஞானிகளை ஈரானில் இருந்து பணியாற்றுமாறு ரஷ்ய அதிபர் புட்டின் கட்டளை பிறப்பித்துள்ளார். பாலஸ்தீனம் மற்றும் காசா என ஒரு நாடு இருதேசத்தை இஸ்ரேல் அங்கீகரித்து ஈரானுடன் சமரசத்திற்கு சென்றால் மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி திரும்பும். 

இல்லை என்று அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்கினால். ஈரானுடன் ரஸ்யா, வடகொரியா , சீனா ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து போரில் குதிக்கும். மூன்றாம் உலகப்போர் வெடிப்பது உறுதி.

 மேற்சொன்ன நாடுகள் ஈரானுடன் இணைந்து போரில் குதித்தால் இஸ்ரேல் முழுமையாக அழியும். இஸ்ரேல் அழியும் நிலை வந்தால் இஸ்ரேலுடன் சேர்ந்து மத்திய கிழக்கில் பல நாடுகளும் அழிவது உறுதி. இறுதியில் பாலஸ்தீனம் எனும் தனி நாடு பிறக்கும் அல்லது மூன்றாம் உலகப்போர் பிறக்கும். ஏது எப்படியானாலும் போரின் முடிவில் இஸ்ரேல் தோற்பது உறுதி. 

 ரொனால்ட் ரம் இஸ்ரேலுக்காக நேரடியாக போரில் ஈடுபட போவதில்லை. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா போர் புரிய வேண்டியது இஸ்ரேலியர்களின் பொறுப்பு. முன்னரை போல படைகளை இறக்கி வீதி வீதியாக வீடு வீடாக சண்டையிடும் காலம் முடிந்து விட்டது. 

யாழ்ப்பாணத்தை விட மூன்று மடங்கு சிறிய அதாவது வடமராட்சி அளவு நிலப்பரப்பை கொண்ட காசாவை கூட கைப்பற்ற முடியாது திணறும் இஸ்ரேலியப்படை ஈரானில் தரையிறக்கினால் தற்கொலை தான்.

 அடுத்த விடயம் மத்திய கிழக்கில் பல நாடுகளில் இராணுவ தளம் அமைத்து இருக்கும் நாற்பது ஆயிரம் வரையான அமெரிக்க படைகளும் இஸ்ரேலை விட ஈரானால் இலகுவாக தாக்கக்கூடிய கிட்டிய தூரத்திலும் இஸ்ரேல் தலைநகர் போல வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலமாக இல்லாத இடங்களிலும் தான் 40 ஆயிரம் அமெரிக்க படைகளும் நிற்கின்றன. 

 இவ்வளவு வலிமையான வான் பாதுகாப்பு கட்டமைப்பை உடைய இஸ்ரேலின் முக்கிய நகரங்களே சாம்பல் மேடாகும் போது ஏனையவை எல்லாம் ஈரானின் ஏவுகணைகளின் முன் தூசு தான். அமெரிக்கா ஈரானின் அணு ஆயுதத்தையும் அங்கீகரித்து , பாலஸ்தீனத்தையும் அங்கீகரிக்க வேண்டும் அல்லது ஜப்பான் மீது இரண்டாம் உலகப்போரை முடிவுறுத்த அணுக்குண்டு வீசியது போல ஈரான் மீதும் அணுக்குண்டு வீச வேண்டும். எது எப்படியானாலும் ஈரானின் பக்கம் படைவலு சமநிலை சாய்ந்து விட்டது. 

இஸ்ரேல், ஈரானின் அதியுயர் தலைவர் காமெனியை கொலை செய்தாலும் போரியல் சமநிலையை ஏற்படுத்துவது கடினம். ஆக மொத்தம் இஸ்ரேல் ஈரான் சமாதான பேச்சும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

 இந்த போர் தொடர்த்தால் உலகப் பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்வது உறுதி. மேற்குலக மற்றும் அரேபிய நாடுகளிடம் கடன் வாங்கி வண்டி ஓட்டும் இலங்கை போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களை மக்கள் கோட்டபாய அரசை விரட்டியது போல விரட்டுவார்கள்.

 இந்த மூன்றாம் நிலை உலக நாடுகள் இப்போது போல் நிர்வகிக்க முடியாது பிளவடைந்து பூமிப்பந்தில் புதிய நாடுகள் உருவாக சந்தர்ப்பம் 100 வீதம் உண்டு.

குறிப்பாக அணுசக்தி நிலையங்கள் அல்லது எண்ணெய் வழித்தடங்கள் சீர்குலைக்கப்பட்டால், தொடர்ந்து எழும் பதட்டங்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் என்றே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

 மூன்றாம் உலகப்போர் தொடங்குமானால் உலகம் இரு துருவமாகும் . 

ஜ நா சபை செயலற்று போகும் . ஆசிய நாடுகள் தமக்குள் ஒரு புதிய ஜ.நா சபை போன்ற ஒரு அமைப்பை நிறுவும். உலகம் இரண்டாக உடையும். நாடுகள் பல இரண்டாக உடையும். இன்றைய உலக ஒழுங்கு நிச்சம் நிச்சயமாக மாறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750358745.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!