கிளிநொச்சி- பச்சிலைப்பள்ள பிரதேச சபை தமிழரசு கட்சி வசம்!

#SriLanka #Kilinochchi #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
1 year ago
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ள பிரதேச சபை  தமிழரசு கட்சி வசம்!

  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இன்று (23) காலை 09:00 மணிக்கு ஆரம்பமானது.

 இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சின் சார்பில் சுப்பிரமணியம் சுரேன் தவிசாளருக்காக பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்டது. 

இவரை எதிர்த்து யாரும் பிரேரிக்கப்படாமையினால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுபரபினர் சுப்பிரமணியம் சுரேன் ஏகமனதாக தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக சிவகுரு செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

13 உறுப்பினர்களைக் கொண்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் 3 உறுப்பினர்களும், தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்கள், தமிழ் தேசியப் பேரவை சார்பில் 1 உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர். 

 தவிசாளர் தெரிவுக்கான அமர்வினைக் காண கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் வேளமளிதன், கட்சியின் மூத்த உறுப்பினர் த.குருகுலராஜா கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1750630849.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4