எமது நாட்டின் பாடசாலைகளில் வகுப்பறைகளை இவ்வாறு மாற்றியமைத்தால் – எல்லா மாணவர்களும் முன்னேறுவார்கள்!
#SriLanka
#School
#Student
Soruban
1 year ago
எமது நாட்டின் பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள பாரம்பரிய வகுப்பறைகள் முறைமையை மாற்றி, மாணவர் நட்பு மற்றும் செயற்பாட்டு முறைமைகளைக் கொண்ட தரவிரிந்த வகுப்பறைகள் உருவாக்கப்பட வேண்டும் என கல்வி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
வகுப்பறைகள் இதில் மாணவர்களுக்கு சுதந்திரமான சிந்தனை, குழுப்பணி, தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஆசானுடனான நேரடி தொடர்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் எனவும், இவ்வகை மாற்றங்கள் முன்னேற்றத்தில் பின்தங்கிய மாணவர்களையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டுவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த புதிய முறைமைகள் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டால், அனைத்து மாணவர்களும் “முன் வரிசை” மாணவர்களாக மாற்றமடைந்து, முழுமையான திறனுடன் சமூகத்தில் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே