டொராண்டோவில் நடந்த சாலை விபத்தில் 59 வயது நபர் மரணம்

#Death #Canada #Accident #Lanka4
Prasu
10 months ago
டொராண்டோவில் நடந்த சாலை விபத்தில் 59 வயது நபர் மரணம்

டொரோன்டோவில் உள்ள நெடுஞ்சாலை 401ல் குப்பை ஏற்றிச்சென்ற டிரக் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலில் 59 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆலன் சாலைக்கு அருகிலுள்ள மேற்கு நோக்கிய விரைவு பாதைகளில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குப்பை ஏற்றிச் சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி, நியூமார்க்கெட் நகரைச் சேர்ந்தவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1754205881.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4