தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்!
#SriLanka
#Student
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 307,951 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 10.45 மணிக்கு முடிவடையவுள்ளது.
அதன் பின்னர், அரை மணி நேர இடைவேளை விடப்படும், அதன் பின்னர் முதல் வினாத்தாள் காலை 11.15 மணிக்கு தொடங்கும். வினாத்தாளுக்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
அதன்படி, வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிவடையவுள்ளது. அதன்படி, 09:30 மணிக்கு தொடங்கும் பரீட்சை பிற்பகல் 12:15 மணிக்கு முடிவடையவுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
