யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

#SriLanka #Accident #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
11 months ago
யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைந்ததுடன்-மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

 கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வருகை தந்த காரும்-யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர்,கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது. 

 இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன்-மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)


(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4