வவுனியாவில் காணாமல் போன 22 வயது இளம்பெண் சுப்பிரமணியன் சர்மிளா

#SriLanka #Vavuniya #Women #Missing
Prasu
10 months ago
வவுனியாவில் காணாமல் போன 22 வயது இளம்பெண் சுப்பிரமணியன் சர்மிளா

வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சர்மிளா என்ற யுவதி கடந்த 18.08.2025 முதல் காணாமல் போயுள்ளார்.

நெளுக்குளத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வைத்தியசாலை சென்று வருவதாக கூறி சென்ற அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

22 வயதுடைய இவ் யுவதி காணாமல் போன நேரத்தில் அவர் நீல நிற பிளாஷா மற்றும் கருப்பு நிறத்தில் வெள்ளை கோடு கொண்ட ரீசேட் அணிந்திருந்தார் எனவும் அவர் தொலைபேசி பாவிப்பதில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் 075-8446312 , 0768446683 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4