ஜனாதிபதி : வடக்கில் ‘தென்னை முக்கோண வலயம்’ அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!
#SriLanka
#NorthernProvince
#President
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
10 months ago
உலக தேங்காய் தினமான இன்று புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி அனுர தலைமையில் வடக்கின் தென்னை அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் “வடக்கின் தென்னை முக்கோண வலயம்” என்ற பெயரில் முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களை இணைத்து முன்னெடுக்கப்படுகிறது.
2027ம் ஆண்டிற்குள் வடக்கு மாகாணத்தில் 50,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
இத்திட்டம் மூலம் வடக்கு மாகாணத்தில் வேளாண் உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
