10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: தாய்லாந்து தூதுவருடன் ஒப்பந்தம்

#SriLanka #Lanka4 #Thailand #Workers
Mayoorikka
10 months ago
10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: தாய்லாந்து தூதுவருடன் ஒப்பந்தம்

தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க, தாய்லாந்தின் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோம்சாய் மொரகோட்ஸ்ரீவனைச் சந்தித்து, 10,000 இலங்கை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான தொழிலாளர் ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார்.

 தாய்லாந்தில் அதிகரித்து வரும் தொழிலாளர் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

 இந்த கலந்துரையாடலின் போது, ​​தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க இலங்கை தரப்பிலிருந்து ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) சமர்ப்பித்து, ஏதேனும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இருப்பின் அது தொடர்பில் கருத்துக்களைக் கோரினார். குறித்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இலங்கையில் அமைச்சரவை ஒப்புதல் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதேநேரம், இந்த வரைவு தாய்லாந்து அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் தொழில் அமைச்சினால் அங்கீகரிக்கப்படும் என தாய்லாந்தின் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோம்சாய் மொரகோட்ஸ்ரீவன் தெரிவித்தார்.

 விவசாயம், கட்டுமானம் மற்றும் கைத்தொழில்துறையில் இலங்கையின் திறமையான பணியாளர்களை எடுத்துரைத்த இலங்கை தூதுவர், தாய்லாந்தின் பொருளாதாரத்துக்கு அவர்களின் சாத்தியமான பங்களிப்பில் நம்பிக்கை தெரிவித்ததுடன், அதே நேரத்தில் தொழிலாளர் நலனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தநிலையில், தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இருதரப்பு தொழிலாளர் இடம்பெயர்வு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4