மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் உயிரிழந்த தாய்: இலங்கையை உலுக்கிய சம்பவம்

#SriLanka #Death #kandy
Mayoorikka
10 months ago
மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் உயிரிழந்த தாய்: இலங்கையை உலுக்கிய சம்பவம்

கண்டி - உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 இந்நிலையில் 32 வயதான தாய் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 34 வயதான அவரது கணவர் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 அதேநேரம் 12, 10 மற்றும் 5 வயதான மூன்று ஆண் பிள்ளைகளும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 இருப்பினும், பிள்ளைகள் தற்போது உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இறந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4