ராஜஸ்தானில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆசிரியர்கள்
#India
#Flight
#Student
#Examination
#Rajasthan
Prasu
3 months ago
ராஜஸ்தானில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வுகளில் 90% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதற்காக விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பயணத்திற்கு அரசாங்கமோ அல்லது எந்த அரசு சாரா நிறுவனமோ நிதியுதவி செய்யவில்லை, ஆனால் பள்ளியின் அதிபர் சங்கர்லால் ஜாட் மற்றும் ஆசிரியர் அஜய் குமார் ஆகியோர் முழுமையாக நிதியுதவி செய்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஆசிரியர்கள் முழு பயணத்திற்கும் ஏற்பாடு செய்து பில்வாராவின் நந்த்ராய் கிராமத்திலிருந்து டையு-டாமனுக்கு விமானப் பயணத்திற்கு 1.5 லட்சம் செலவிட்டுள்ளனர்.
12ம் வகுப்பில் 52 மாணவர்களில் 48 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 70% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
(வீடியோ இங்கே )