ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடக் கூடாது!

#SriLanka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
9 months ago
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை தகவல்களை வெளியிடக் கூடாது!

 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின் ஒரு பகுதியாக அவை இருப்பதால், இந்தத் தகவலை வெளியிடுமாறு நாடாளுமன்றம் கூட உத்தரவிடக்கூடாது என்றும்  அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரி யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 விசாரணைகளை மறைமுகமாக நாசப்படுத்த முயற்சிப்பவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4