மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல்மயப்படுத்தும் அரசியல்வாதிகள்!

#SriLanka
Mayoorikka
8 months ago
மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல்மயப்படுத்தும் அரசியல்வாதிகள்!

மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மாவீரர் இல்லங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் தமது அரசியஅரசிய நோக்கங்களிற்காக மாவீரர்களை வைத்து தமது வாக்கு வங்கிகளை அதிரித்துக் கொள்வதற்காக மாவீரர் துயிலுமில்லங்களிற்கு சென்று துப்பரவு செய்தல், அதனை புகைப்படம் எடுத்து பகிர்வது போட்டி போட்டுக் கொண்டு நடைபெறுகின்றன.

 இந்த புனிதமான நினைவு இடங்கள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் மாவீரர் துயிலும் இல்லங்களிற்கு சென்று அவற்றை துப்பரவு செய்து, பூ மரங்கள் நாட்டி அதனை ஒரு புனிதமான இடமாக வைத்திருந்தார்கள்.

 ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த மாவீரர் இல்லங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்ட நிலையில் அவ்வாறான செயற்பாடுகள் இல்லாமல் போய்விட்டன.

 இந்த நிலையில் மாவீரர் துயிலுமில்லங்களை கண்டும் காணாமலும் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் கார்த்திகை மாதம் மட்டும் அங்கு படையெடுக்கும் நிலைமை காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமே.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4