ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு விளக்கமறியில் நீடிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 months ago
ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு  விளக்கமறியில் நீடிப்பு!

அனுராதபுரம் பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை நவம்பர் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் அதிபர் ஒருவர் நவம்பர் 5 ஆம் திகதி ஒரு கிலோகிராமுக்கு மேல் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். 

 எப்பாவல நல்லமுதாவ சாலை பகுதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சோதனையை நடத்தியது.

அதிபருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 1 கிலோகிராம் 185 கிராம் ஹெராயின், எப்பாவல, எடகல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

 கூடுதலாக, அதிபர் அருகிலுள்ள தொட்டியில் கொட்டிய போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும் பாலிதீன் சீலர் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு அதிபரின் மகனும் 25 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 பின்னர் வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் கைது செய்யப்பட்ட அதிபரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்தார். 

இதற்கிடையில் அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் என்பது பின்னர் தெரியவந்தது. 

 இந்நிலையில் தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேலியகொட நகர சபை உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4