அரசு ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகிக்கும் அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு!

#SriLanka #Namal Rajapaksha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
8 months ago
அரசு ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகிக்கும் அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு!

அரசாங்கம் அரசு ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைய காலம் பலருக்கு மிகவும் சவாலான காலம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். 

 கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இலங்கை காவல்துறை "முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மோசமடைந்துள்ளது. 

 அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட அதிக வரிச்சுமையால் பொதுமக்கள் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நவம்பர் 21 அன்று நுகேகொடையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்குமாறு தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைத்து நபர்களும் வருகை தரலாம். 

 இந்த பேரணி யாரையும் அதிகாரத்திற்கு உயர்த்துவதற்காக அல்ல, மாறாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்தை வலியுறுத்தவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4